தமிழ்நாட்டில் மொழி, சைவ பேரறிவியல், மருத்துவம் ஆகிய மூன்று நூற்களும் அல்லது முறைகளும் ஒரு சேர உருவாக்கப்பட்டது அல்லது அருளப்பட்டது
சித்தர் - சித்தர் என்போர், எல்லாக் கலைகளையும் (பதிணெண்மொழி, அறுபத்து நான்கு கலையும்) நன்று கற்று, பயின்று, சிந்தித்து, ஞானம் பெற்று, அறிவு தெளிந்து, தொண்ணூற்றாறு தத்துவங்களோடு கூடிய உடல் அமைப்பை புரிந்து கொண்டு நிலம், மொழி, தனித்துவம் பெற்ற வாத, பித்த, கப என உயிர்களின் தன்மைக்கு ஏற்றவாறு மருத்துவ முறையை உருவாக்கியவர்கள். உயிர் ஒன்றேயாயினும், இயங்குத் தன்மையில் ஆக்கல் செயலுள்ளபோது வாதம் எனவும், நிலைத்தல் (காத்தல்) செயலுள்ளபோது பித்தம் எனவும், அழித்தல் செயலுள்ளபோது கபம் எனவும் உயிர் ஓட்ட சக்தியை "நாடி" அமைப்பாகவும், உடலில் பிரகிருதியாகவும்(அமைப்பு), மாறுபட்ட நிலைகளில் நோயாகவும் உணரப்படுகிறது.
சித்தர்கள், சித்த மருத்துவத்தின், மருத்துவ முறையாகிய மணி, மந்திர, அவிழ்தமென்பது "நோயைத் தடுத்தும்", "வந்த நோயைப் போக்கியும்", "உடலை அழியாது காக்கும்" காய கற்பம் - காயம்-உடல் கற்பம்-கல்லைபோல் உடலை நீண்ட காலம் வாழச் செய்தல் என்னும் சிறந்த ஒரு முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தினர். இதில் "மணி" என்பது தாதுப்பொருட்கள் (மினரல்ஸ்) கொண்டு இரசவாத முறையில் மருந்துகளை உண்டாக்குதல் அதாவது (Chemical Reaction) தாதுக்களை குறிப்பிட்ட முறையில் "இணைத்தல்" "ஒன்றாக்குதல்" என்ற முறையும் தெய்வசக்தியால் குணமாக்கப்படுவதும், "மந்திரம்" என்பது "மனத்தின் தரம்" ஒவ்வொருவரும் அவர்களின் மனத்தின் திறத்தால் ஐம்புலனை அடக்க மூச்சடக்கி மனதையோர் நிலைக்குக் கொணர்ந்து, உடலை காக்கும் பொருட்டு ஓகம் (யோகம்) (மந்திரம்) என்னும் முறையில் புலன்களை சிதற வொட்டாமல் தம் நாட்டத்தை ஒரு நிலையில் வைத்து மந்திரத்திற்கான எழுத்துகளை ஓதல்
சித்தர்கள் இந்நிலையையும் தாண்டி மந்திரத்திற்கான எழுத்துக்களை ஓதாமலே ஆறு நிலைகளையும் தம் வழியாக்கி, தம் சிந்தனை வழியாகவே இவ்வுலக வாழ்க்கையையும், மருத்துவ முறைகளையும் உணர்ந்து, அனுபவித்து, மக்களுக்கு அளித்த "முறையான" முறையாகும். இதுவே தந்திர முறையாகும். தன்னையடக்கல் - தியான முறையாகும்.
நோய் வருவதற்கு உணவு முறையும், வெளிபுற சூழ்நிலைகள், தட்பவெட்பங்கள் மட்டும் காரணமில்லை. "நமக்குள்ளே நடக்கும் செயல்களும், செயல்படுத்தும் விதமும் தான்" மிக முக்கிய காரணிகளாகின்றன. இம்முறையை சரியாக வைத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? இதோ!
இவ்விடத்தில் சமாதி என்பது சமாதியடைதல் என்பது மட்டும் இல்லை. மேற்கண்ட ஏழு(7) செயல்கள் நாம் சரியாக வைத்திருக்கும் நிலையில் வெளிபுற சூழ்நிலையுடன் பஞ்சபூத சக்தியுடன் நம் பஞ்பூத சக்தி சமம் பெறுகிறது. இதனால் உடல் அழிவிலிருந்து காக்கப்படுகிறது.
இதனால் நாடி நரம்புகள் (யூகி சிந்தாமணியில் எழுபத்தீராயிர நரம்புகள், இடகலை சுழுமுனை பிங்கலை என்ற நரம்புகள், எருவாய்க்கும், கருவாய்க்கும் நடுவில் அமைந்திருக்கும் நரம்புக்கூட்டம். இங்கிருந்து எழும் ஒரு நரம்பு "குண்டலினி" இந்நரம்புகள் கத்திரிக்கோல் போல் மாறுவதையும் தம் நூலில் கூறியுள்ளார்) அமைதி பெற்று நோய் வராமல் தடுப்பு சக்தி பெறுகிறது.
இம்முறைகளையாவும் மந்திர, தந்திரமுறைகள்.
அவிழ்தம்:- காயகற்பத்தில் மூன்றாவது முறை. அவிழ்+தம். உடலில் பிணிக்கப்பட்ட வாத, பித்த, கப குற்றங்களையும் ஐந்துவாயுக்கள், ஏழு உடற்தாதுக்களிலும் ஏற்றத்தாழ்வுகள் அவிழ்பதே (கழறுவது) அவிழ்தம் (மருந்துகள்). இம்மருந்துகள் மூன்று வகைகளில் இப்பு+மியிலிருந்தே இயற்கையாக கிடைக்கிறது. ஆவைகள்
முதல் இரண்டு வகைகளில் குடிநீர், சாறு, பொடி, இளகம், எண்ணெய் என்ற மருந்து முறைகளாகவும் அல்லது "உணவு வகைகளாகவும்", தரைபடுபொருள்களை பற்பம், செந்தூரம் என்ற மருந்து முறைகளாகவும் அல்லது "உபயோகப்படுத்தும்" பொருள்களாகவும் நம்பண்பாட்டில் இருந்துவருகிறது. நாம் யாரும் இதை "பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது" இவ்வாறு நாம் இயற்கையோடு இயற்கையாக இருக்கும் பொழுது எங்கிருந்து பின்விளைவுகள் வரும்? என்பதை சிந்தித்து சித்தம் பெற வேண்டும். சித்தம் பெற்றவர்கள் "சித்தர்கள்". அவர்கள் இம்மருத்துவ முறையை கொண்டு நம் உடலின் 96 தத்துவங்கள், (சூக்கும உடற்கூறு) (யூகி சிந்தாமணி, வைத்திய சதக நாடி என்ற சித்த மருத்துவ நூல்களில்) பருவுடலின் உடற்கூற்றில் (Anatomy) எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும், இவ்விரண்டையும் வெளி பஞ்சபூத சக்தியோடு இணைக்கும் "காரணவுடல்" பற்றியும் தெளிந்தவர்கள்.
96 தத்துவமாக உருவாக்கப்பட்ட யாக்கையின் (உடலின்) இயற்கை இலக்கணமான வளி உடலினன், பித்த (அழல்) உடலினன், ஐய (கப) உடலினன் என்ற இயற்கை உடல்வன்மையானது, கால வன்மை - "இளவேனில், முதுவேனில், என பொழுதுகளும் (காயம்) நில அமைப்புகளும், உடலின் வயதாலும்" செயற்கை வன்மை - இயற்கையாக அமைந்த முக்குண உடலை சத்துவம், இரோச, தமோ குணத்தை மாற்றிக் கொள்வதாலும் (உணவு, செயல்) அதாவது உணவை சக்தியாக உடலாக மாற்றுவதில் பங்கு வகிக்கும் நான்கு வகையான உடற்றீ (தீ) - சமாக்கினி, விஷமாக்கினி, தீஷணாக்கினி, மந்தாக்கினி ஆகியவற்றின் செயல்பாட்டால் அமைந்த" ஏழு உடற்கட்டுகளின் இயற்கை பண்புகள் மாறுபட்டு அவைகள் குறைந்தோ, மிகுந்தோ (சாரம், செந்நீர், ஊண், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர்) உடல் பிணிபடும் (நோய்வாய்பப்படும்)
செயல்களால் உடல் வன்மை எவ்வாறு பிணிபடுகிறது என்பது பதினான்கு வேகங்களை அதன் இயற்கை தொழில் புரியவிடாமல் அடக்குதல் அல்லது அதிகமாக்குதல் என்ற செயலாலும் உடல் பிணிபடும். அவைகள்
இவ்வாறாக உடல்வன்மையானது, பாதிக்கப்பட்டு முத்தோடம், முக்குற்றங்களின் வேற்றுமைகளாகி உடலுடன் பிணைந்த உயிர் அனுபவிக்கும் துன்ப (உரோகம்) உணர்ச்சி உடற்பிணி
முக்குணங்களின் (சத்துவ, இரசோ, தமோ) வேற்றுமையால் வந்த மன (வருத்தம் அல்லது உரோகம்) உணர்ச்சி மனப்பிணி.
இவ்வாறாக இயற்கையான உடல்வன்மையானது, பருவகால வேறுபாடுகளினாலும், இயற்கையின் பஞ்சபூத தன்மைகளின் ஏற்ற, தாழ்வுகளினாலும், உயிர்களின் உடலிலும், மனத்திலும், முக்குற்ற, முக்குண மாறுபாடுகள், உணவு, செயல் மாறுபாடுகள், வாழ்க்கை முறைகள் ஆகியவைகளினால் உண்டான பிணிகள், பிணிகள் அல்லாது உடல்வன்மை கெடுதல், பிணிகள் தாங்க கூடிய (நோய் எதிர்ப்பு என்பது முடியாதது! தாங்குதல், போராடுதல் என்பது மட்டுமே நடக்கக்கூடும்! அல்லது வாய்ப்பு) வகையில் உடலுக்கு வன்மை கொடுக்ககூடியது தான் சித்த மருந்துகள். வாயில் விழுங்ககூடியவைகள் மட்டுமே மருந்துகள் இல்லை. உடலின் வெளிப்புறம் அதனை சரியாக வைத்துக்கொள்ள கூடிய தைலதேய்ப்பு, மூலிகை பொடி தேய்ப்பு, பற்று, ஒற்றடம் என 32 வகைகளும், ஆசனம் பிராணயாமம் தியானம், உடல் உள்உறுப்புகளுக்கான பயிற்சிகள், (ஓம் போன்ற மந்திரங்கள் உச்சரிப்பதன் மூலம் உடல் நல்ல நிலையில் வைத்துக் கொள்ளுதல்) தினசரி ஒழுக்கங்கள், உறவு ஒழுக்கங்கள், உணவுமுறைகள், ஐம்புலன்கள் மிகுதியாக செல்லவிடாமலும், அடக்காமலும், சமநிலையில் வைத்து ஆளுதல் வேண்டும், அறம், பொருள், இன்பம் இவற்றிலும், உணவு முறையிலும் அதிக, குறைவு இல்லாமல் நடுவுநிலைமையுடன் இருத்தல் வேண்டும்.
அடுத்து வாழும் இடம் எப்படியிருக்க வேண்டும்? உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் வகையில் நிலமானது (பூமி) 5 வகையாக பிரிக்கப்பட்டு நிலத்தின் தன்மை, விளையும் மூலிகைகள், வாழும் மக்களின் வாழ்க்கை முறை, நீரின் தன்மை, அதற்கேற்றவாறு உண்டாகும் நோய்கள் அவைகளுக்குரிய மருந்துகள் என கூறப்பட்டுள்ளது. அந்த 5 வகை நிலங்கள்
பிறகு சூரியனை பூமி வடக்கு வழி செல்லும் போது உத்தராயணம், தெற்கு வழி செல்ல தட்சிணாயனம். இதனை கொண்டு ஆறு பருவகாலங்களாக பிரிக்கப்பட்டு, அக்காலத்திற்கு ஏற்ற உணவு, சிற்றுண்டி வகைகள், விளையாட்டு முறைகள், வாழ்க்கை முறைகள், உண்டாகும் நோய்களுக்கான மருந்துகள், மூலிகைகள் என சித்தர்கள் கூறியுள்ளனர். அந்த ஆறு பருவகாலங்கள்
இக்காலங்களில் தனித்தனியாக எந்த சுவையுடன் கூடிய உணவுகள் உட்கொள்ள வேண்டும் என மிக தெளிவாக கூறியுள்ளனர். எந்த சத்துகள் நிறைந்தது என மட்டும் அறிவது எல்லா மக்களுக்கும் கண்டிப்பாக பொருந்தாது. சுவையும், குணமும் மிக மிக அவசியம். அவ்வாறு கூறப்பட்ட ஆறுசுவைகள்
இனிப்பு, புளிப்பு, உப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு
அடுத்து ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் காலை 4-6 மணிக்குள் எழுந்து இரவு 7-8 மணிக்குள் உறங்கும் கால வரையிலான நாள் ஒழுக்க முறையை கடைபிடித்தனர். ஒருநாளைக்கு இரண்டு முறை உண்பது நலம். மூன்று முறை உண்ணும் பொழுது காலையில் ---- மணிக்குள்ளும், மதியம் ----- மணிக்குள்ளும், இரவில் ------ மணிக்குள்ளும் உண்ண வேண்டும். மனத்துயரம், சினம் இல்லாமலும், பேசாமலும், பொறுமையாக உட்கொள்ள வேண்டும். உணவு அறுசுவைகளுடன், நெய்ப்பு தன்மையுடனும், சிறிது சூடாகவும் இருத்தல் நலம். உணவின் அளவானது, அவர்அவர்களின் தொழிலைக் குறைவின்றி நடத்துவதற்கான உடற்றீயின் அளவாகும். உணவுக்கேற்ற நீரை (வெந்நீர், மோர், காடிநீர்) இடைஇடையே அவர்அவர்களின் நீர்வேட்கைக்கு ஏற்றவாறு அருந்த வேண்டும்.
மண்பூதத்தின் தன்மையாக வாழும் இடமும், உணவும், நீர்பூதமாக திரவ வடிவ உணவுகளும் எந்த இட நீரை எந்த வகையில் அருந்த வேண்டும் என்பதையும் அறிந்த நாம் அடுத்து தீ பூதத்தை எந்த வகையில் பயன்படுத்துகிறோமானால், மாலை வெயிலில் தான் கண்டிப்பாக காய வேண்டும். அப்பொழுதுதான் குற்றபிணிகள் வழுவெற நீங்கும்.
அடுத்து செயற்கையான உண்டாக்கப்படும், வேள்விபுகை நீண்ட ஆயுளை (நோய் எதிர்ப்பு சக்தியை) கொடுக்கும். மருத்துவமுறையில், பிணிகளை பரிகரிக்கும் பொருட்டு, தூபமுறைகளும், மருந்துகள் செய்வதற்கும், மருத்துவ குணம் வாய்ந்த மரங்கள், மூலிகைகளே பயன்படுத்தப்படுகின்றன.
காற்று: (வாயுபூதம்) கடலையடுத்த நிலக்காற்று - கபபிணியோர்கள்தவிர. மற்றவர்களுக்கு பலன் தரும்.
குறிஞ்சி நிலக்காற்று, உடலுக்கு வன்மை தரும்.
முல்லை நிலக்காற்று, வெப்பத்தையுண்டாக்கும்.
மருதநிலக்காற்று, எப்பிணியையும் வரவொட்டாது.
பாலைநிலக்காற்று, பற்பல பிணிகட்கு உட்படுத்தும்.
ஆகவே கட்டப்படும் வீடுகளும், தொழிற்சாலைகளும், கோவில்களும் அதாவது மக்கள் இருக்கும் இடங்கள் எல்லாம் நல்ல காற்று வீசும் வகையில் மிகுந்த அறிவியல் புர்வமான முறைகளுடன் தான் அக்கால கட்டட அமைப்புகள் இருந்தன. எனவே வாழும் மக்கள் அனைவரும் இவ்வளவு விசயங்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
ஆகாயம்: (ஆகாயபூதம்) சந்திரன் (அமாவாசை, பெளர்ணமி) நட்சத்திரங்கள், கோள்கள், போன்றவைகளின் சக்திகளின் தாக்கம் எப்பொழுதும் உயிரினங்களுக்கு கொடுத்துக் கொண்டு இருக்கின்றன.
இந்த பஞ்சபூத சக்திகள் நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ நம்மை இயக்கி கொண்டுதான் இருக்கின்றன.
நாம் அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் உயிர்களின் வாழ்நாளாகிறது. அடுத்து நோய் (பிணி) வரும் வழிகள்: அணுகாமல் காத்துக் கொள்ளும் முறைகளை கூறியுள்ளனர்.நோயின் உற்பத்தி: (வரும் காரணங்கள்)
பிணியணுகாமல் இருக்க கடைபிடிக்கும் விதிகள்:-